சிதம்பரம் அருகே திருடுபோன அம்மன் சிலை மீட்பு!
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கானூர் கிராமத்தில் திருடுபோன அம்மன் சிலையை போலீஸார் மீட்டனர். அச்சிலையை திருடிய இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிலை திருட்டில் சம்பந்தப்பட்ட மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.








