ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சிறுவாணி குடிநீர் குழாய் துண்டிப்பு விவகாரம் : கோயம்பத்தூர் மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

சிறுவாணி குடிநீர் குழாய் துண்டிப்பு விவகாரத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றும் விவகாரத்தில் கோயம்பத்தூர் மாநகராட்சிக் கூட்டத்தில் இன்று சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :11 ஜூன் 2014, 5:24 am

வேல்முருகன்

சிறுவாணி குடிநீர் குழாய் துண்டிப்பு விவகாரத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றும் விவகாரத்தில் கோயம்பத்தூர் மாநகராட்சிக் கூட்டத்தில் இன்று சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

சிறுவாணி குடிநீர் குழாய் துண்டிப்பு விவகாரத்தில் கேரளாவைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

அப்போது, திமுக உறுப்பினர் மீனா லோகநாதன், மக்களவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதற்கு சிறப்பு தீர்மனம் நிறைவேற்றினீர்கள். ஆனால் இதுபோன்ற முக்கிய பிரச்னைகள் குறித்து தீர்மானம் நிறைவேற்ற அலட்சியம் காட்டுகிறீர்கள் என்று கடுமையாகக் கூறினார்.

இதனால் கோபமடைந்த அதிமுக உறுப்பினர்கள் அவைத் தலைவரை முற்றுகையிட்டனர்.

இதனால், திமுக உறுப்பினர் மீனா லோகநாதனை வெளியேற்ற துணை மேயர் லீலாவதி உன்னி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.