இதனால் பெற்றோர் பயந்து போய் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் வகுப்பிலேயே சேர்க்க வேண்டிய நிலையில் உள்ளார்கள்.ஊராட்சி ஒன்றிய, நகராட்சி பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் சேர்க்கைக்காக கிராமத்திற்குள் செல்லும் போது, பெரும்பாலான கிராமங்களில் அவர்களை மதிப்புக்குறைவாகவே கிராம மக்கள் பார்க்கிறார்கள். அரசுப் பள்ளியில் தங்களது பிள்ளை படித்தால் மதிப்புக் குறைவு என்ற எண்ணம் உள்ளது. மேலும் கிராமத்தில் ஒரு பிள்ளை, அரசு உதவி பெறும் பள்ளிக்கு பேருந்தில் சென்றால், அவர்கள் பிள்ளையைவிட என் பிள்ளை குறைந்ததா? என்று சொல்லி அதே பேருந்தில் அரசு உதவி பெறும் பள்ளி்க்கு தங்களது பிள்ளையை பெற்றோர் அனுப்பி வைக்கிறார்கள்.இது குறித்து பல்வேறு ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கூறுகையில், அரசுப் பள்ளிகளில் அனைத்து வசதி வாய்ப்புகள், நவீன கற்பித்தல் யுக்திகள் இருந்தும், மாணவர் சேர்க்கைக்கு அரசு உதவி பெறும் பள்ளிகளுடன் போட்டியிட முடியவில்லை.