கூமாப்பட்டி, இமானுவேல் தெரு, ராஜேந்திரன் மகன் நாகராஜ் (25) என்பவர் கொடுத்துள்ள புகார் மனு விவரம்: நாகராஜ் தனது ஆட்டோவை ஊராட்சி மன்றத் தலைவர் வீட்டு அருகில் நிறுத்தியிருந்தாராம். அப்போது க.நீராத்துலிங்கம், க.தமிழரசன், செ.தங்கப்பாண்டி, சே.பூச்சன் உள்ளிட்ட 17 பேர் அங்கு வந்தார்களாம். வந்தவர்கள் ஆட்டோவில் வைத்து மது குடித்ததாகவும், அதில் ஒருவர் ஆட்டோவில் வாந்தி எடுத்தும் விட்டாராம். இதனையடுத்து நாகராஜ் சத்தம் போட்டதாகவும், இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், நாகராஜை அக்கும்பல் தாக்கியதுடன், ஊராட்சி மன்றத்திற்குச் சொந்தமான குடிநீர் குழாயை சேதப்படுத்தியதாம். இதன் பேரில் போலீஸார் 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.