விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவிலி. அருகே இருவர் விஷம் குடித்து தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

News image
Updated On :20 ஜூன் 2014, 5:20 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், வன்னியம்பட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் மின்வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பழனியம்மாள் (48). குடும்ப பிரச்னை காரணமாக விஷம் குடித்த பழனியம்மாள், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.

வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் மகள் பாக்கியவதி (22) கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நாச்சியார்பட்டியைச் சேர்ந்தவர் சஞ்சீவி (40). இவர் அணைத்தலைப்பட்டி-வன்னியம்பட்டி இடையே ஒரு காட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது வெள்ளிக்கிழமை காலை தெரியவந்தது.

இவரது சடலத்தைக் கைப்பற்றி, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். இது குறித்தும் வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.