விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இரீடியம் கலந்த கோவில் கலசம் இருப்பதாக கூறி ஏமாற்ற முயன்ற 5 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர்ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரீடம் கலந்த கோவில் கலசம் இருப்பதாக கூறி ஏமாற்ற முயன்ற 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.வத்திராயிருப்பு காவல் நிலைய ஆய்வாளர் வி.ராமகிருஷ்ணன், வத்திராயிருப்பு-கூமாப்பட்டி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

News image
Updated On :20 ஜூன் 2014, 5:24 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரீடம் கலந்த கோவில் கலசம் இருப்பதாக கூறி ஏமாற்ற முயன்ற 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.வத்திராயிருப்பு காவல் நிலைய ஆய்வாளர் வி.ராமகிருஷ்ணன், வத்திராயிருப்பு-கூமாப்பட்டி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது வந்த ஒரு காரை வழிமறித்து நிறுத்தி சோதனையிட்டார். அதில் வந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக தகவல்களைக் அளித்துள்ளனர். இதனையடுத்து போலீஸார் காவ்ல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் இரீடியம் கலந்த கோவில் கலசம் உள்ளது என்று பொய் வதந்தி பரப்பி, மக்கள் ஏமாற்றி பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது.

இதனையடுத்து போலீஸார் கூமாப்பட்டியைச் சேர்ந்த பா.முத்துவேல் (45), புளியங்குடியைச் சேர்ந்த மா.கணேசன், சிவகிரியைச் சேர்ந்த செ.மணி (64), மா.துரைப்பாண்டி (38), கேரளாவைச் சேர்ந்த கி.விஜயகுமார் (42) ஆகிய 5 பேரைக் கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.