இதில் அருகிலிருந்த மீனாட்சிசுந்தரம் கூடாரத்துக்கும் தீ பரவியது. தீப்பற்றியதில் கூடாரங்கள் எரிந்து தரை மட்டமாயின. இந்த தீவிபத்தில் சிக்கி கூடாரத்துக்குள் வேலை செய்து கொண்டிருந்த கும்பகோணத்தைச் சேர்ந்த அருமைதுரை (45) உடல் கருகி உயிரிழந்தார். மேலும், விபத்தில் வெடித்துச் சிதறிய கற்கள் காலனி குடியிருப்புகளில் வந்து விழுந்ததால், வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த சின்ராஜ் மகள் காளீஸ்வரி (7), சந்தோஷம் மனைவி பொன்னம்மாள் (79) மற்றும் காளிமுத்து (13) ஆகியோர் படுகாயமடைந்து உயிரிழந்தனர். காயமுற்று சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சங்கரலிங்காபுரத்தைச் சேர்ந்த துரைராஜ் (45), சங்கரவேல் (42) ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.இந்த விபத்தில் கூடாரத்தின் அருகே இருந்த 7 வீடுகள் சேதமடைந்தன.