திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

வத்திராயிருப்பில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வத்திராயிருப்பு வட்டார வளமையத்தில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான மூன்று நாள் பயிற்சி புதன்கிழமை நிறைவு பெற்றது.மகாராஜபுரம், தம்பிபட்டி, கூமாப்பட்டி, துலுக்கபட்டி, சுந்தரபாண்டியம், மேலக்கோபாலபுரம், அயன்கரிசல்குளம், மேலப்பாளையம் ஆகிய 8 குறுவளமையங்களில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் 201 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:34 am

ஜெயகுமார்

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வத்திராயிருப்பு வட்டார வளமையத்தில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான மூன்று நாள் பயிற்சி புதன்கிழமை நிறைவு பெற்றது.மகாராஜபுரம், தம்பிபட்டி, கூமாப்பட்டி, துலுக்கபட்டி, சுந்தரபாண்டியம், மேலக்கோபாலபுரம், அயன்கரிசல்குளம், மேலப்பாளையம் ஆகிய 8 குறுவளமையங்களில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் 201 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ல் ஏற்படுத்தப்பட்ட செயல்பாடுகளான தரமான கல்வி, குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு, இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், பள்ளி வளர்ச்சித் திட்டம் தயாரித்தல், அரசின் நலத்திட்ட உதவிகள், யோகா, நலவாழ்வு, சத்துணவு மற்றும் சுகாதாரம் உள்ளிட்டவை குறித்து உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் பல்வேறு செயல்பாடுகள் மூலம் பள்ளியில் உறுப்பினர்களின் பங்களிப்பு மற்றும் ஆர்வம் உணர்த்தப்பட்டது.

பயிற்சியை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பரமேஸ்வரி பார்வையிட்டார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.