தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நெல்லையில் இருந்து விழுப்புரம், விருதுநகருக்கு கொண்டு செல்லப்பட்ட 882 வாக்குப்பதிவு இயந்திரங்கள்

திருநெல்வேலியில் இருந்து விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களுக்கு மொத்தம் 882 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

News image
Updated On :12 மார்ச் 2014, 10:11 am

முத்துகுமார்

திருநெல்வேலியில் இருந்து விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களுக்கு மொத்தம் 882 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

திருநெல்வேலி ராமையன்பட்டியில் உள்ள வேளாண் இடுபொருள் கிட்டங்கி வளாகத்தில் உள்ள அறையில் சுமார் 5 ஆயிரத்து 190 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த அறைக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்த்து அனுப்பி வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு 232 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெ.சண்முகம் தலைமையில் விக்கிரவாண்டி வட்டாட்சியர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் ராமையன்பட்டிக்கு வந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்த்து பெற்றனர். பின்னர் அவை லாரியில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் விழுப்புரத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. மாலையில் விருதுநகர் மாவட்டத்திற்கு 650 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் வட்டாட்சியர் பால்துரை கூறுகையில், ராமையன்பட்டியில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை விழுப்புரம், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களுக்கு தேவையான அளவு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக 2 மாவட்டங்களுக்கு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.