ரயிலில் அடிபட்டு பள்ளி மாணவர் சாவு

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள சின்னதானகுப்பத்தை சேர்ந்தவர் தம்பிராம். சிமெண்டு தொட்டிகள் தயாரித்து குள்ளஞ்சாவடி பகுதியில் கடை வைத்து விற்பனை செய்து
Updated on
1 min read

ரயிலில் அடிபட்டு பள்ளி மாணவர் உயிரிழந்தார்.

 கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள சின்னதானகுப்பத்தை சேர்ந்தவர் தம்பிராம். சிமெண்டு தொட்டிகள் தயாரித்து குள்ளஞ்சாவடி பகுதியில் கடை வைத்து விற்பனை செய்து வருகிறார். இவரது மகன் திலகர் (16). 10ஆம் வகுப்பு படித்து வருகிறார்.  தேர்வு நெருங்குவதால் சிமெண்டு தொட்டிகள் விற்பனை கடையில் தங்கி திலகர் படித்து வந்தார்.

 புதன்கிழமை அதிகாலையில் திலகர் அந்த கடையின் பின்பக்கம் உள்ள ரயில் பாதையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக திருச்சி நோக்கி சென்ற பயணிகள் ரயில் மோதி அந்த இடத்திலேயே இறந்தார்.

 இதுகுறித்து சிதம்பரம் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com