அவர் அளித்த பேட்டியில், மலையாள படத்தில் நடித்தாலும், தற்போது அதிகமாக நடித்து வருவது தமிழ்படங்களில்தான். தற்போது நடிகர்கள் விஷாலுடன் நடித்த நான் சிகப்பு மனிதன், சித்தார்த்துடன் நடித்த ஜிகர்தண்டா, விமலுடன் நடித்த மஞ்சப்பை, கவுதம் கார்த்தியுடன் நடித்த சிப்பாய் ஆகிய படங்கள் விரைவில் வரவுள்ளது. புதிய படங்களுக்கு ஒப்புதல் வழங்கவில்லை. கதாநாயகிக்கு முக்கியத்துவம் வழங்கும் இரண்டு படங்களுக்கான கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது. கேரளாவில் ரசிகர்கள் நேரம் கிடைத்தால் படங்களுக்கு செல்வர், ஆனால் தமிழகத்தில் நேரம் ஒதுக்கி ஒருபடத்தை இருமுறை, மூன்றுமுறை பார்க்கின்றனர். திரைப்படங்களில் நடிப்பவர்களை தமிழ்நாட்டு ரசிகர்கள் மிகவும் நேசிக்கின்றனர். கிராமங்களுக்கு படப்பிடிப்புக்கு சென்றால் பாசம், அன்பு அதிகமாக காட்டுகின்றனர். பழனியில் ஒரிருபடங்களில் நடித்த நிலையில் வருத்தமில்லா வாலிபர் சங்க நிகழ்ச்சிக்காக வந்திருந்தேன்.