ப.சிதம்பரம் வந்தால் செருப்பால் அடியுங்கள்: அதிமுக வேட்பாளர் பேச்சால் அதிர்ச்சி; புகார் மனு பதிவு
ப.சிதம்பரம் உங்கள் தொகுதிக்கு ஓட்டு கேட்டு வந்தால் அவரை செருப்பால் அடியுங்கள் என்று கூறிய அதிமுக வேட்பாளரால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. இந்நிலையில், மானாமதுரை காவல் நிலையத்தில் அவருக்கு எதிரான புகார் மனு பதிவு செய்யப்பட்டுள்ளது.








