இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் வயது வந்தோர் கல்வித் துறை சார்பில், சத்குரு மாதா அமிர்தானந்த மயி தேவி மடம் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் விருதுநகர் மாவட்ட மக்கள் கல்வி நிறுவனத்தில் 2014-15-ம் ஆண்டிற்கான தொழிற்பயிற்சிகள் மாவட்டம் முழுவதும் வழங்கப்படவுள்ளது.இதில் பெண்களுக்கு நர்ஸிங் அசிஸ்டண்ட் (உதவி செவிலியர்), தையல்கலை, அழகுகலை, மென் பொம்மைகள் தயாரித்தல், ரெடிமேட் கார்மெண்ட்ஸ், ஆரி மற்றும் சர்தோஷி வேலைப்பாடுகள், சேலையில் பிரிண்டிங் செய்தல், உல்லன் வேலைப்பாடுகள், மெஷின் மற்றும் கை எம்பிராய்டரி, சணல் பொருட்கள் தயாரித்தல் பயிற்சிகளும், ஆண்களுக்கு எலக்ட்ரிக்கல் டெக்னீசியன், பிளம்பிங் இன்வெர்ட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளது.மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் வழங்கப்படவுள்ள இத் தொழிற்பயிற்சிகள் அனைத்தும் பயனாளிகள் சார்ந்துள்ள கிராமங்கள் மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் பகுதி நேரமாக தினமும் 2 மணி நேரம் வழங்கப்படும்.