தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கீழையூர் அருகே இளைஞர் கத்தியால் குத்திக் கொலை

நாகை மாவட்டம், கீழையூர், பிரதாபராமபுரம் கோவில் தெருவைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் நாகராஜ் என்ற தங்கராஜ்(28). பிரதாபராமபுரம், தச்சர் தெருவைச் சேர்ந்த நல்லப்பன் மகன் பாலாஜி என்ற பாலச்சந்திரன்

News image
Updated On :5 மே 2014, 1:25 pm

சங்கர்

நாகை மாவட்டம்,  கீழையூர் அருகே கள்ளக் காதலைக் கண்டித்த இளைஞர், கத்தியால் குத்தி ஞாயிற்றுக்கிழமை இரவு கொலை செய்யப்பட்டார்.

நாகை மாவட்டம், கீழையூர், பிரதாபராமபுரம் கோவில் தெருவைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் நாகராஜ் என்ற தங்கராஜ்(28). பிரதாபராமபுரம், தச்சர் தெருவைச் சேர்ந்த நல்லப்பன் மகன் பாலாஜி என்ற பாலச்சந்திரன்(30).

பாலச்சந்திரனுக்கும், தங்கராஜின் உறவினர் பெண்ணுக்குமிடையே கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதன் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை இரவு பாலச்சந்திரனை அழைத்து தங்கராஜ் கண்டித்துள்ளார்.இதனால், ஆத்திரமடைந்த பாலச்சந்திரன், தங்கராஜை கத்தியால் குத்தியுள்ளார். இதில், பலத்தக் காயமடைந்த தங்கராஜ், சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இது குறித்து கீழையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாலச்சந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.