அங்குள்ள நீராவி கலனில் இருந்து வெளியேற்றப்பட்ட வெப்பநீர் திடீரென கசிந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த அணுஉலையின் நிரந்தர தொழிலாளர்களான கூடன்குளத்தை சேர்ந்த விஞ்ஞானியின் உதவியாளர் பவுல்ராஜ், தொழில்நுட்ப உதவியாளர்களான ராதாபுரத்தை சேர்ந்த செந்தில்குமார், கூடன்குளம் அருகே ஸ்ரீரங்கநாராயணபுரத்தை சேர்ந்த ராஜன் மற்றும் தனியார் நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்களான கன்னியாகுமரி மாவட்டம் கேசவன்புதூரை சேர்ந்த ராஜேஷ், மார்த்தாண்டத்தை சேர்ந்த வினு, தென்காசியை சேர்ந்த மகேஷ் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த 6 பேரும் நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.