ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

திருவண்ணாமலையில் சூறாவளிகாற்றுடன் கூடிய பலத்த மழை.

திருவண்ணாமலையில்  பிரசித்தி பெற்ற சித்திரா பெளர்ணமி திருவிழா நடந்துவருகிறது.இதையொட்டி சுமார் 10 லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள் பாதுகாப்பு பணியில் 3500 போலீசார்

News image
Updated On :14 மே 2014, 6:08 pm

சரவண பெருமாள்

திருவண்ணாமலையில்  பிரசித்தி பெற்ற சித்திரா பெளர்ணமி திருவிழா நடந்துவருகிறது.இதையொட்டி சுமார் 10 லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள் பாதுகாப்பு பணியில் 3500 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் இரவு 10.30 மணி முதல்  திருவண்ணாமலை ,அதை சுற்றி உள்ள பகுதிகளில் சூறாவளிகாற்று மற்றூம் இடியுடன் கூடிய கன மழை பெய்துவருகிறது.தொடர்ந்து 30 நிமிடங்களுக்கு மேலாக பெய்துவரும் கன மழை காரணமாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் கிரிவலம் வந்துள்ள சுமார் 10 லட்சம் பக்தர்கள் மழையில் நனைந்தபடி ஒதுங்க இடமில்லாமல் மரத்தின் ஓரமும்,சாலையோர கடைகளிலும்  தஞ்சம் அடைந்துள்ளனர்.சூறாவளி காற்று காரணமாக மின்சாரம் தடைபட்டுள்ளது .சிறப்பு பேருந்து இயக்காமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது மேலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடமுடியாமல் திணறிவருகின்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.