1957ம் ஆண்டு இரட்டை மெம்பர் தொகுதியாக இத்தொகுதி இருந்தது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர்.கனகசபைபிள்ளை, எல்.இளையபெருமாள் ஆகியோர் எம்பியாக வெற்றி பெற்றனர். பின்னர் 1962 தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர்.கனகசபைபிள்ளை, 1967, 1971-ல் திமுகவைச் சேர்ந்த வி.மாயவன், 1977-ல் அதிமுகவைச் சேர்ந்த ஏ.முருகேசன், 1980-ல் திமுகவைச் சேர்ந்த வே.குழந்தைவேலு, 1984, 1989. 1991 ஆகிய மூன்று முறை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டாக்டர் ப.வள்ளல்பெருமான், 1996-ல் திமுகவைச் சேர்ந்த வே.கணேசன், 1998-ல் பாமகவைச் சேர்ந்த தலித் எழில்மலை, 1999, 2004-ல் பாமகவைச் சேர்ந்த இ.பொன்னுசாமி, 2009-ல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.