இதில் இரு கார்களும் அப்பளம் போல் நொறுங்கியது. இவ்விபத்தில் ஃபோர்டு காரில் வந்த கடலூர் அண்ணாநகரைச் சேர்ந்த பரத் (25), சங்கர் (31), மற்றும் மற்றொரு காரான ஸ்கார்பியோ காரில் வந்த சிதம்பரம் திருநகரைச் சேர்ந்த தமிழ்மணி (23), கொத்தங்குடித்தெருவைச் சேர்ந்த தினேஷ் (23), அன்பரசன் (25), ராஜ்மோகன் (32) ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்து அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கிள்ளை போலீஸார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.