பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நெல்லையில் ரயில்வே கேட் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் திடீர் தர்னா

திருநெல்வேலியில் இருந்து 15 கி.மீ தொலைவில் பொன்னாக்குடி பேரின்பபுரத்தில் ஆளில்லாத லெவல் கிராசிங்கை கடக்க முயன்றபோது, கார் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த 3

News image
Updated On :18 மே 2014, 2:56 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி அருகே ரயில் விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்த பேரின்புரத்தில் ரயில்வே கேட் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் திடீரென தர்னாவில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலியில் இருந்து 15 கி.மீ தொலைவில் பொன்னாக்குடி பேரின்பபுரத்தில் ஆளில்லாத லெவல் கிராசிங்கை கடக்க முயன்றபோது, கார் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த 3 பெண்கள் உயிரிழந்தனர். பேரின்பபுரம் 113 ஆம் எண் ஆளில்லாத கிராசிங்கில் ரயில்வே கேட் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே ரயில் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்ததால், அங்கு உடனடியாக ரயில்வே கேட் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை பேரின்பபுரம் ரயில் கிராசிங்கில் திரண்டு திடீரென தர்னாவில் ஈடுபட்டனர். அவர்கள் அங்கு ரயில்வே கேட் அமைக்க வேண்டும் வலியுறுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.