சிதம்பரம் அருகே கவரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் மனைவி அண்ணப்பூரணி (44). சிதம்பரத்தில் வசித்து வந்த அண்ணப்பூரணி கணவர் குணசேகரன் 6 வருடம் முன்பு நோய்வாய்பட்டு இறந்த பின்னர் தனது மகன் கபிலன், மகள் பர்வதவர்தினி ஆகியோருடன் சொந்த ஊரான சிதம்பரம் அருகே உள்ள கவரப்பட்டு கிராமத்தில் வசித்து வந்தார். கூலி வேலை செய்து குழந்தைகளை படிக்க வைத்து குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லா இருந்த அண்ணப்பூரணி தீவிர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உடல்நிலை சரியில்லாததால் தனது குழந்தைகளை காப்பாற்ற முடியாது என்பதால், புதன்கிழமை இரவு அண்ணபூரணி குளிர்பானத்தில் வயலுக்கு அடிக்கப்படும் பூச்சி மருந்தை கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு, தானு குடித்துவிட்டு படுத்துவிட்டார். காலை வீட்டின் கதவு திறக்கப்படாததால், சந்தேகப்பட்டு அருகாமையில் உள்ள கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தாய், மகன்,மகள் மூவரும் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அண்ணாமலைநகர் போலீஸார் சென்று மூவரது உடலை கைப்பற்றி பிரேச பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்