எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: மாநில அளவில் 2,3-ம் இடம் பிடித்து தேனி பள்ளிகள் சாதனை

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில் தேனி மாவட்ட பள்ளி மாணவர்கள் மாநில அளவில் 2-ம் இடம் 3-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

Updated On :23 மே 2014, 10:15 am

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில் தேனி மாவட்ட பள்ளி மாணவர்கள் மாநில அளவில் 2-ம் இடம் 3-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

     பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இதில் தேனி மாவட்டத்தில் தேனி மேரி மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன் எம்.சத்திய செல்வன், தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.லோஷினி  ஆகிய 2 பேர் 500-க்கு 498 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 2-ம் இடமும் தேனி மாவட்ட அளவில் முதலிடமும் பெற்றுள்ளனர்.

     சத்திய செல்வன் தமிழில் 98 மதிப்பெண்களும், மற்ற பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்ணும் பெற்றுள்ளார். இவரது தந்தை முத்தையா பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளராக பணிபுரிகிறார். தாயார் அமிர்தவல்லி, தனது மகன் படிக்கும் மேரி மாதா மெட்ரிக் பள்ளியிலேயே தமிழாசிரியையாக பணிபுரிகிறார். பயோமெட்ரிக் குரூப்பில் சேர்ந்து படிக்க உள்ளதாக கூறும் சத்திய செல்வன் மருத்துவ படிப்பில் சேர்ந்து படித்து மருத்துவ சேவை செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

     இதேபோல் மாணவி எஸ்.லோஷினி தமிழ்-99, ஆங்கிலம் 100, கணிதம்-100, அறிவியல்-99, சமூக அறிவியல்-100 மொத்தம் 498 மதிப்பெண் பெற்றுள்ளார். இவரது தந்தை சுப்புராஜ் விவசாய பொறியியல் துறையில் பொறியாளராக பணிபுரிந்து விபத்தில் இறந்து விட்டார். தாயார் பிரமிளாவின் பராமரிப்பில் லோஷினி படித்து வருகிறார். தாயார் அஞ்சல் துறையில் பணிபுரிந்து வருகிறார். மருத்துவராக விருப்பம் தெரிவித்துள்ள லோஷினி கிராமப்புற மக்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார்.

     தேனி மாவட்டம் முத்துத்தேவன்பட்டி, வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி வி.பவித்ரா, தேனி, மேரி மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன் எம்.ஆர்.கோகுல், தேனி மேலப்பேட்டை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஏ.இஷானா பாத்திமா ஆகியோர் 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3-ம் இடமும், தேனி மாவட்ட அளவில் 2-ம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

     வி.பவித்ரா தமிழ் -98, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். எம்.ஆர்.கோகுல் தமிழ் -98, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஏ.இஷானா பாத்திமா தமிழ் -98, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.