இதனையடுத்து தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் தனிவார்டில் சந்திரா சேர்க்கப்பட்டு மே 23-ம் தேதி கடலூர் இணை இயக்குநர் (நலப்பணிகள்) டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான மருத்துவக்குழுவினர் 2 மணி நேரம் போராடி சந்திரா வயிற்றிலிருந்த ஒரு கிலோ எடையுள்ள கட்டியை அகற்றினர். அறுவை சிகிச்சையின் போது தலைமை மருத்துவர் அமுதா சிவானந்தம், டாக்டர் சாந்தி, மயக்க மருந்து டாக்டர் ராமச்சந்திரன், செவிலியர்கள் ஆனந்தி, பசுபதிநாதம், உதவியாளர் செளந்தரராஜன் உடனருந்தனர். அறுவை சிகிச்சைக்கு பின் சந்திராவிற்கு ரத்தம் கொடுக்கப்பட்டு நலமாக உள்ளார். மேலும் கட்டியை திசு பரிசோதனைக்காக கடலூர் கிருஷ்ணா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.