தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிதம்பரம் நகர போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து, குஞ்சம்மாள் குடியிருப்பு மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா என போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடலூரிலிருந்து தடய அறிவியல் துறை நிபுணர் குழு மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.