விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

புகையிலை நோய்களால் அரசிற்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு: ஐ.எம்.ஏ. செயலாளர்

இந்தியாவில் புகையிலை பயன்பாட்டால் வரும் நோய்களைக் குணப்படுத்தும் வகையில் அரசிற்கு ஆண்டிற்கு ரூ.1 லட்சம் கோடி வரை செலவாகிறது என்று இந்திய மருத்துவக் கழகத்தின் விருதுநகர் மாவட்டச் செயலாளர்

News image
Updated On :31 மே 2014, 10:41 am

கோ.ஜெயக்குமார்

இந்தியாவில் புகையிலை பயன்பாட்டால் வரும் நோய்களைக் குணப்படுத்தும் வகையில் அரசிற்கு ஆண்டிற்கு ரூ.1 லட்சம் கோடி வரை செலவாகிறது என்று இந்திய மருத்துவக் கழகத்தின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் டாக்டர் ஏ.செல்வராஜன் கூறினார்.

உலக புகையிலை எதிர்ப்பு நாளையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்டடத் தொழிலாளர்களிடையே ஐ.எம்.ஏ. சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் அவர் கருத்துரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது. உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது.

புகையிலை பயன்பாட்டினால் வரும் காசநோய், இருதய நோய், மாரடைப்பு, சுவாசக் கோளாறு, ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட நோய்களைக் குணப்படுத்த ஆண்டிற்கு சுமார் ரூ.1 லட்சம் கோடி அரசிற்கு செலவாகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரமும், குடும்பப் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. சுற்றுப்புறச் சூழல் மாசடைகிறது. புகையிலை பயன்படுத்தும் பழக்கம் கட்டடத் தொழிலாளர்களிடம் அதிகம் காணப்படுகிறது. இந்த நாளில் புகையிலை பயன்படுத்துவோர், இனி புகையிலை பயன்படுத்த மாட்டேன் என உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.