அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

போர் மற்றும் ஆயுத மோதல்கள் சூழலில் சுரண்டல் தடுக்கும் சர்வதேச தினம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்,

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:19 am

ஜெயகுமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், போர் மற்றும் ஆயுத மோதல்கள் சூழலில் சுரண்டல் தடுக்கும் சர்வதேச தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சி.பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது.

தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா முன்னிலை வகித்தார். ஆசிரியை ந.ரெங்கலதா வரவேற்றார்.

தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற  நல்லாசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

உலகில் போர்கள் நடைபெறும் போது, இயற்கை வளங்கள் சுரண்டப்படுகிறது. மரம், வைரங்கள், தங்கம் போன்ற உயர்-மதிப்பு வளங்கள் மற்றும் எண்ணெய், அல்லது அத்தகைய வளமான நிலம் மற்றும் நீர் போன்ற வளங்களை சுரண்டப்படுகிறது. இதுபோன்று இயற்கை வளங்களை சுரண்டுவது சம்பந்தப்பட்ட மோதல்களின் மீட்சியை இருமடங்கு ஆக்கிவிடுகிறது.

வாழ்வாதாரங்களை மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன என்றால் எந்த நீடித்த அமைதி இருக்க முடியாது. இதனைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவற்காக ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு ஆண்டுதோறும் நவம்பர் 6-ம் தேதியை போர் மற்றும் ஆயுத மோதல்கள் சூழலில் சுரண்டல் தடுக்கும் சர்வதேச தினமாக அறிவித்துள்ளது என்றார் அவர். நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை ச.பொன்மலர் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.