பல்கலைக்கழக நிர்வாகம் முதல் கட்டமாக போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த பல்கலைக்கழக வரலாற்றுத்துறையில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர் சுப்பிரமணியன், ஆங்கிலத்துறையில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர் ராஜ்மோகன் மற்றும் லக்னோ படிப்புமையத்தில் பணியாற்றும் தொடர்பு அலுவலர் அருள், பொறியியல் புல நூலகத்தில் பணியாற்றும் டெக்னிகல் அஸிஸ்டன்ட் பாண்டியன், பல்கலைக்கழக நிர்வாக கட்டட அலுவலகத்தில் பணியாற்றும் கருத்தியல் உதவியாளர் அப்பாதுரை, தொலைதூரக்கல்வி மையத்தில் பணியாற்று இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6 பேர் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் எனக்கூறப்படுகிறது.