புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சிதம்பரத்தைச் சேர்ந்த பேராசிரியருக்கு இந்திராகாந்தி தங்க பதக்க விருது

சிதம்பரத்தைச் சேர்ந்த பேராசிரியர் டி.விஸ்வலிங்கத்திற்கு (படம்) புதுதில்லி குளோபல் எக்கினாமிக் புகாரகரஸ் மற்றும் ரிசர்ச் பவுன்டேஷன் அமைப்பின் இந்திராகாந்தி சத்பவனா தங்கப்பதக்க விருது வழங்கி

News image
Updated On :22 நவம்பர் 2014, 3:15 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தைச் சேர்ந்த பேராசிரியர் டி.விஸ்வலிங்கத்திற்கு (படம்) புதுதில்லி குளோபல் எக்கினாமிக் புகாரகரஸ் மற்றும் ரிசர்ச் பவுன்டேஷன் அமைப்பின் இந்திராகாந்தி சத்பவனா தங்கப்பதக்க விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரத்தைச் சேர்ந்த பேராசிரியர் டி.விஸ்லிங்கம் திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரி முதல்வராக பணியாற்றுகிறார். இவருக்கு புதுதில்லியைச் சேர்ந்த குளோபல் எக்கனாமிக் புராகரஸ் மற்றும் ரிசர்ச் அசோசியேஷன் என்ற அமைப்பு சிறந்த பணிக்கான இந்திராகாந்தி சத்பவானா கோல்ட் மெடல் அவார்டு வழங்கியுள்ளது. பெங்களூரில் நவ.19-ம் தேதி நடைபெற்ற விழாவில் பேராசிரியர் டி.விஸ்வலிங்கத்திற்கு, முன்னாள் கர்நாடக மாநில ஆளுநர் வி.எஸ்.மாலிமத் விருதினை வழங்கி கவுரவித்தார்.

பேராசிரியர் டி.விஸ்வலிங்கம் 32 ஆண்டுகளாக சிதம்பரம், நாமக்கல், காட்பாடி, சைதாப்பேட்டை குடியாத்தம் திருவாரூர், அரசு கல்லூரிகளில் விரிவுரையாளராகவும், பேராசிரியராகவும், கல்லூரி முதல்வராகவும் பணியாற்றி வருகிறார். ஓராண்டு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.