மனைவி, மகன்கள் மற்றும் நண்பர்களிடம் போலீஸார் விசாரணை: கொலை செய்யப்பட்ட வெங்கடேசன் கடந்த நவ.20-ம் தேதி புதுச்சேரியில் உள்ள தனது தங்கை கிருஷ்ணவேணி வீட்டிற்கு சென்று அன்றிரவு ஊர் திரும்பியுள்ளார். பின்னர் 8 மணிக்கு புதுச்சேரியில் உள்ள தனது அக்கா மகள் உமாவிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். அதன் பின்னர் 9 மணிக்கு மேல் செல்போன் செயலிழந்துள்ளது. இதனால் வெங்கடேசன் வியாழக்கிழமை இரவே கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை போலீஸார் ஊர்ஜிதம் செய்துள்ளனர். மேலும் நகர போலீஸார் வெங்கடேசன் மனைவி ராணி, மகன்கள் விஜயக்குமார், சரவணன், புதுச்சேரியில் உள்ள அவரது தங்கை கிருஷ்ணவேணி, அக்கா மகள் உமா உள்ளிட்ட உறவினர்கள், நண்பர்கள் அனைவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை குறித்து எவ்வித துப்பும் கிடைக்காததால் போலீஸார் திணறி வருகின்றனர். வெங்கடேசனின் நண்பரான ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் போதும் கலியமூர்த்தி வீடு பூட்டியிருப்பதால், சந்தேகத்தின் பேரில் போலீஸார் அவரை தேடி வருகின்றனர்.