போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கடலூர் காவல் நிலையத்தில் தமிழக கடலோர காவல்படை ஐ.ஜி ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் கடற்கரையோர காவல் நிலையங்களான கடலூர் முதுநகர், கடலூர் துறைமுகம் ஆகியவற்றில் தமிழக கடலோர காவல்படை ஐ.ஜி. கே.சொக்கலிங்கம் திங்கள்கிழமை ஆய்வு

Updated On :24 நவம்பர் 2014, 3:18 pm

கடலூர் காவல் நிலையத்தில் தமிழக கடலோர காவல்படை ஐ.ஜி.கே.சொக்கலிங்கம் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

கடலூர் மாவட்டத்தில் கடற்கரையோர காவல் நிலையங்களான கடலூர் முதுநகர், கடலூர் துறைமுகம் ஆகியவற்றில் தமிழக கடலோர காவல்படை ஐ.ஜி. கே.சொக்கலிங்கம் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார். காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும் கோப்புகள், மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடலில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் போது உயிர்பாதுகாப்பு கவசங்களை கண்டிப்பாக அணிந்து செல்ல வேண்டும். இது படகு கவிழ்வது, வலையில் சிக்கிக்கொள்வது போன்றவற்றிலிருந்து காப்பாற்றும். அதேப்போன்று மீனவர்கள் எல்லையைத் தாண்டிச் சென்று மீன் பிடிக்க முயற்சிக்கக் கூடாது. இது தொடர்பாக இன்று (நவ.25) கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் கடலூர் மாவட்ட மீனவர்கள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படுகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.