பொள்ளாச்சி அருகே வால்பாறையில் தடுப்புச் சுவரில் மோதி பள்ளத்தில் வேன் கவிழ்ந்ததில் 7 பேர் பரிதாபமாக பலியாகினர்.
கேரள மாநிலம் மலப்புரம் பகுதி சேர்ந்த 16 பேர் சுற்றுலா வேனில் நேற்றுமுன்தினம் (ஏப். 15) கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
வால்பாறை முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு இன்று (ஏப்.17) மாலை பொள்ளாச்சி வழியாக கேரளம் செல்லவதற்காக வேனில் வந்து கொண்டிருந்தபோது வால்பாறை மலைப்பாதையில் உள்ள 13-வது கொண்டை ஊசி வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தடுப்பு சுவரில் மோதி 800 அடி வனப்பகுதியில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து 11-வது கொண்டை ஊசி வளைவில் விழுந்து நொறுங்கியது.
இந்தக் கோர விபத்தில் வேனில் இருந்த 16 பேரில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அந்த வேனில் இருந்த 8 பேர் படுகாயங்களுடன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் கடுமையாகச் சேமடைந்த வேனனை மீட்கும் பணியில் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
சுற்றுலா வேனில் வந்தவர்கள் கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி சேர்ந்த ஆசிரியர்கள் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
Seven people tragically lost their lives when a van crashed into a retaining wall and plunged into a gorge in Valparai, near Pollachi.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
காா் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: முதியவா் உயிரிழப்பு

வேன் மோதியதால் நீா்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்து இருவா் உயிரிழப்பு

பால தடுப்புச் சுவரில் மோதி பள்ளி வேன் விபத்து: 3 போ் காயம்

பாகிஸ்தானில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 40 பேர் பலி!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



