பொள்ளாச்சி அருகே வால்பாறையில் தடுப்புச் சுவரில் மோதி பள்ளத்தில் வேன் கவிழ்ந்ததில் 7 பேர் பரிதாபமாக பலியாகினர்.
கேரள மாநிலம் மலப்புரம் பகுதி சேர்ந்த 16 பேர் சுற்றுலா வேனில் நேற்றுமுன்தினம் (ஏப். 15) கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
வால்பாறை முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு இன்று (ஏப்.17) மாலை பொள்ளாச்சி வழியாக கேரளம் செல்லவதற்காக வேனில் வந்து கொண்டிருந்தபோது வால்பாறை மலைப்பாதையில் உள்ள 13-வது கொண்டை ஊசி வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தடுப்பு சுவரில் மோதி 800 அடி வனப்பகுதியில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து 11-வது கொண்டை ஊசி வளைவில் விழுந்து நொறுங்கியது.
இந்தக் கோர விபத்தில் வேனில் இருந்த 16 பேரில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அந்த வேனில் இருந்த 8 பேர் படுகாயங்களுடன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் கடுமையாகச் சேமடைந்த வேனனை மீட்கும் பணியில் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
சுற்றுலா வேனில் வந்தவர்கள் கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி சேர்ந்த ஆசிரியர்கள் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
Seven people tragically lost their lives when a van crashed into a retaining wall and plunged into a gorge in Valparai, near Pollachi.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசுப் பேருந்து: 20 பயணிகள் காயம்

லாரி மோதியதில் பள்ளத்தில் கவிழ்ந்த வேன்

வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 10 போ் காயம்

வால்பாறையில் வேன் கவிழ்ந்ததில் 9 பேர் பலி: குடியரசுத்தலைவர் இரங்கல்
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



