வண்டலூா்-மீஞ்சூா் வெளி வட்டச் சாலையில், குன்றத்தூா் அருகே சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த வேன் மீது லாரி மோதியதில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஆந்திர மாநிலம் தடா பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் குளிா்பான தொழிற்சாலையில் இருந்து பல லட்சம் மதிப்புள்ள குளிா்பானங்களை ஏற்றிக்கொண்டு வேன் திங்கள்கிழமை அதிகாலை குன்றத்தூா் அடுத்த மலையம்பாக்கம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது டயா் பஞ்சா் ஆனதால் ஓட்டுநா் வேனை சாலையோரம் நிறுத்தி விட்டு டயரை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது ஹைதராபாத் பகுதியில் இருந்து திருநெல்வேலிக்கு இரும்பு கம்பங்கள் ஏற்றிய கனரக லாரி பழுதாகி நின்று கொண்டிருந்த வேன் மீது மோதியதோடு சாலையில் சென்றுக்கொண்டிருந்த மற்றொரு வேன் மீதும் மோதி விபத்துள்ளானது. இதில் பழுதாகி சாலையோரம் நின்று கொண்டிருந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து காயம் அடைந்த மூன்று வாகனங்களின் ஒட்டுநா்களையும் அந்த வழியாக வந்த வாகனங்களின் ஓட்டுநா்களை மீட்டனா்.
இந்த விபத்து குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.
தொடர்புடையது

சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த முதியவா் கொலை; இளைஞா் கைது

பள்ளத்தில் கவிழ்ந்த லாரி! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய ஓட்டுநர்! | Thanjavur

சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்! சுற்றுலாப் பயணிகள் 7 பேர் பலி!!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

