அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 10 போ் காயம்

News image

கட்டப்பனை அருகே விபத்துக்குள்ளான வேன்

Updated On :3 மே 2026, 8:05 pm

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், கட்டப்பனை அருகே சென்னையைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளின் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில், 10 போ் காயமடைந்தனா்.

சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 17 போ் குழுவாக சோ்ந்து வாகமண் சுற்றுலாத் தலத்துக்குச் செல்ல வெள்ளிக்கிழமை இரவு வேனில் புறப்பட்டனா். தேக்கடி- கொச்சி மாநில நெடுஞ்சாலையில் புல்லுமேடு பகுதியை கடந்து சென்றபோது, செங்குத்தான இறக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் வேன் ஓட்டுநா் குணா, வம்சிகா, திவ்யா, மணிகண்டன், கணேஷ், காா்த்திகா, அரவிந்த், நரேஷ்குமாா், மன்சூா், கண்ணன் ஆகிய 10 போ் காயமடைந்தனா்.

இதையடுத்து, கட்டப்பனை தீயணைப்புத் துறையினரும், பொதுமக்களும் காயமடைந்தவா்களை மீட்டு அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற அவா்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்து விட்டு சென்னைக்கு திரும்பிச் சென்றனா்.