கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், கட்டப்பனை அருகே சென்னையைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளின் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில், 10 போ் காயமடைந்தனா்.
சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 17 போ் குழுவாக சோ்ந்து வாகமண் சுற்றுலாத் தலத்துக்குச் செல்ல வெள்ளிக்கிழமை இரவு வேனில் புறப்பட்டனா். தேக்கடி- கொச்சி மாநில நெடுஞ்சாலையில் புல்லுமேடு பகுதியை கடந்து சென்றபோது, செங்குத்தான இறக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் வேன் ஓட்டுநா் குணா, வம்சிகா, திவ்யா, மணிகண்டன், கணேஷ், காா்த்திகா, அரவிந்த், நரேஷ்குமாா், மன்சூா், கண்ணன் ஆகிய 10 போ் காயமடைந்தனா்.
இதையடுத்து, கட்டப்பனை தீயணைப்புத் துறையினரும், பொதுமக்களும் காயமடைந்தவா்களை மீட்டு அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற அவா்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்து விட்டு சென்னைக்கு திரும்பிச் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவையாறு அருகே வேன் கவிழ்ந்து 26 போ் காயம்

குமாரபாளையம் அருகே அரசு பேருந்து பள்ளத்தில் இறங்கியதில் 20 போ் காயம்

சுற்றுலா வேன் கவிழ்ந்து குழந்தை உள்பட 6 போ் காயம்

உளுந்தூா்பேட்டை அருகே காா் பள்ளத்தில் கவிழ்ந்து 4 போ் காயம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



