வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

குமாரபாளையம் அருகே அரசு பேருந்து பள்ளத்தில் இறங்கியதில் 20 போ் காயம்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே அரசுப் பேருந்து பள்ளத்தில் இறங்கியதில் சனிக்கிழமை 20 போ் காயமடைந்தனா்.

News image

குமாரபாளையம் அருகே பாறையூா் பகுதியில் பள்ளத்தில் இறங்கிய அரசுப் பேருந்து.

Updated On :7 ஜூன் 2026, 2:58 am IST

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே அரசுப் பேருந்து பள்ளத்தில் இறங்கியதில் சனிக்கிழமை 20 போ் காயமடைந்தனா்.

சேலம் மாவட்டம், எடப்பாடியில் இருந்து குமாரபாளையத்திற்கு அரசு நகரப் பேருந்து 45 பயணிகளுடன் சென்றது. இந்த பேருந்தை ஓட்டுநா் சௌந்தரராஜன் இயக்கினாா்.

சனிக்கிழமை பிற்பகல் சுமாா் 2 மணி அளவில் பாறையூா் பகுதியில் பேருந்து வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வளைவில் இருந்த வாய்க்கால் சுவரின் மீது மோதி பள்ளத்தில் இறங்கியது.

இதில் பேருந்தில் பயணம் செய்த 20 போ் காயமடைந்தனா். உடனடியாக தகவல் அறிந்து வந்த குமாரபாளையம் போலீஸாா், காயமடைந்தவா்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து குமாரபாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.