தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் சிலம்பாட்டம் காண்போர் மனதை கவரும் வகையில் அமைந்தன. மாணவர்களுக்கு பயிற்சியளித்த, தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளி ஆசிரியர் இரா. எல்லாளன் அவர்களுக்கு, ஆசிரியர் மு.முருகவேள் சால்வை அணிவித்து கவுரவித்தார். தமிழ்க் காப்பணி சார்பில் சிதம்பரம் வட்ட பள்ளி மாணவர்களுக்கிடையே நவ.16-ம் தேதி நடத்திய பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளித்து, தமிழ்க் காப்பணி பொதுச் செயலாளர் பா.பழநி வாழ்த்துரையாற்றினார். பொறியாளர் க.அருணபாரதி, ஒளிப்படங்களுடன் சிறப்புரையாற்றினார். மு.சம்பந்தம் நன்றி கூறினார்.