அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகரில் மதுப்பாட்டில்கள் விற்றதாக 4 பேர் கைது

Updated On :26 நவம்பர் 2014, 5:22 pm

விருதுநகரில் முறைகேடாக மதுப்பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் பகுதியில் காலை நேரங்களில் அதிக விலைக்கு மதுப்பாட்டில்களை விற்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரனுக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் குறிப்பிட்ட பகுதிகளில் சோதனை நடத்த காவல் துணைக்கண்காணிப்பாளர் சக்கரவர்த்திக்கு உத்தரவிட்டார். உடனே மேற்கு காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதில் புதன்கிழமை காலையில் ரோந்து சென்ற போது முறைகேடாக மதுப்பாட்டில்களை அதிக விலைக்கு விற்றுக் கொண்டிருந்தது தெரிய வந்தது. உடனே அவர்களை போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதில், புல்லலக்கோட்டை சாலையில் தங்க்ச்சாமி(48), வடமலைக்குறிச்சி சாலையில் சுப்பிரமணி(65), கச்சேரி சாலையில் லட்சுமணன்(35), பழைய பேருந்து நிலையம் அருகே மனோகரன்(54) ஆகியோரை கையும் களவுமாக பிடித்து அவர்களிடம் இருந்து 80 மதுப்பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். அதோடு, இது தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.