விருதுநகர் மாவட்டத்தில் விலையில்லா கறவை மாடுகள், ஆடுகளுக்கான இனப்பெருக்க மருத்துவ பரிசோதனை மற்றும் குடற்புழு நீக்க முகாம் வருகிற 28,29 ஆகிய நாள்களில் நடைபெற இருக்கிறது.
இது தொடர்பாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முதல்வரின் சிறப்பு திட்டத்தின் சார்பில் கிராமங்களில் ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் விலையில்லா ஆடுகள் மற்றும் கறவை மாடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் பயனாளிகளை ஊக்கப்படுத்தும் வகையில் சிறப்பாக கால்நடைகளை பராமரித்தவர்களை கால்நடை துறை அலுவலர்களால் தேர்வு செய்து தமிழ் புத்தாண்டு நாளில் பரிசும் அளிக்கப்படுகிறது. இந்நிலையில் கறவை மாடுகளின் பால் உற்பத்தியை பெருக்கவும், ஆடுகளின் எடையினை அதிகரிக்கவும் மேற்குறிப்பிட்ட நாள்களில் இனப்பெருக்க மருத்துவ பரிசோதனை, குடற்புழு நீக்கம் முகாம் நடைபெற இருக்கிறது.
எனவே பயனாளிகள் மற்றும் விவசாயிகள் ஆகிய அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செல்வப்பெருந்தகை சிறைபிடிப்பு! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!

வருமான வரித்துறை அதிகாரிகளால் சிறைப்பிடிப்பு: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு!
திருட மட்டும்தான் தெரியும்... கர டிரைலர்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

