எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கேரளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழக எல்லையில் சோதனைச் சாவடி அமைப்பு

கேரளத்தில் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், அங்கிருந்து தேனி மாவட்டம் வழியாக தமிழகத்துக்கு கோழி, வாத்து மற்றும் முட்டைகள் கொண்டு

Updated On :27 நவம்பர் 2014, 12:43 pm

கேரளத்தில் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், அங்கிருந்து தேனி மாவட்டம் வழியாக தமிழகத்துக்கு கோழி, வாத்து மற்றும் முட்டைகள் கொண்டு வருவதை தடுப்பதற்கு தமிழக எல்லையில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில்  சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

   கேரளத்தில் உள்ள கோட்டயம், ஆழப்புலா ஆகிய மாவட்டங்களில் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் நோய் பாதித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நோய், பாதிக்கப்பட்ட வாத்து இனத்தில் இருந்து மற்ற பறவை இனங்களயும், மனிதர்களையும் தாக்கும் வாய்ப்பு உள்ளது. பறவை காய்ச்சல் நோய் வைரஸ் பன்றிகள் மூலம் பறவை இனங்களையும், மனிதர்களையும் பாதிக்கும்.

      கேரளத்தில் பறவை காய்ச்சல் நோய் பாதிப்பு உள்ளதால், அங்கிருந்து தமிழகத்துக்கு கோழி, வாத்து மற்றும் முட்டைகள் கொண்டு வர அரசு தடை விதித்துள்ளது. கேரளத்தில் இருந்து தேனி மாவட்டம் வழியாக கோழி, வாத்து மற்றும் முட்டைகள் கொண்டு வருவதை தடுப்பதற்கு, தமிழக எல்லையில் உள்ள லோயர்கேம்ப், கம்பம்மெட்டு, போடிமெட்டு ஆகிய இடங்களில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தேனி மாவட்டத்தில் வாத்து முட்டைகள் பயன்படுத்துவதை தவிர்க்கவும், இறைச்சி விற்பனைக் கடைகளில் அன்றாடம் சோதனை நடத்தவும், பறவைக் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சுகாதாரத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

      மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் அறிகுறி, பாதிப்பு மற்றும் சந்தேகங்கள் இருப்பின், மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குரை, செல்போன் எண்:944500 01122-ல் பாùதுமக்கள் மற்றும் கோழி, வாத்து வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோர் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.