புதுச்சேரி பெரியகாட்டுகுப்பத்தில் கடந்த நவ.19-ம் தேதி பூரணாங்குப்பத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் மனோகர் என்பவர் ஒருகும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் இதுவரை போலீஸார் 5 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வந்தனர். இந்நிலையில் இக்கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பூரணாங்குப்பத்தைச் சேர்ந்த அழகர் (38), சிலம்பரசன் (36) ஆகிய இருவர் வெள்ளிக்கிழமை கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில், நீதிபதி பரமசிவம் முன்பு சரணடைந்தனர். சரணடைந்த இருவரையும், நீதிபதி 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து இருவரும் கடலூர் மத்தியசிறையில் அடைக்கப்பட்டனர்.