வேலைவாய்ப்பு முகாம் தொடக்க விழாவில் வணிகவியல் பிரிவு தலைவர் முனைவர் கே.விஜயராணி வரவேற்றார். தொலைதூரக்கல்வி இயக்கக இயக்குநர் முனைவர் ஆர்.எம்.சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார். உற்பத்தி மர்றும் பொறியியல் துறை பேராசிரியர் ரகுகாந்தன் வாழ்த்துரையாற்றினார். வேலைவாய்ப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் சி.சமுத்திரராஜ்குமார் விளக்கவுரையாற்றினார். பேராசிரியர் ஆர்.இளங்கோவன் நன்றி கூறினார். இதனை தொடர்ந்து நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட தமிழக வரலாற்றில் முதல்முறையாக தொலைதூரக்கல்வி மூலம் பயின்ற 16 மாணவர்களுக்கு பணி நியமன ஆணையை பல்கலைக்கழக நிர்வாகியும், தமிழகஅரசு முதன்மைச் செயலருமான ஷிவ்தாஸ்மீனா வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பதிவாளர் என்.பஞ்சநதம் பங்கேற்று பணிநியமண ஆணை பெற்ற மாணவர்களை வாழ்த்திப் பேசினார்.