அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

ராணுவ வீரரின் இரு சக்கர வாகனத்திலிருந்த ரூ.1.50 லட்சம் திருட்டு

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் ராணுவ வீரர் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனத்தின்

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:01 am

ஜெயகுமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் ராணுவ வீரர் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனத்தின் பெட்டியை உடைத்து அதிலிருந்த ரூ.1.50 லட்சம் பணத்தைத் திருடிச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர், பெருமாள்பட்டி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் ரமேஷ் (32). இவர் இந்திய ராணுவத்தில் லேன்ட்ஸ் நாயக் ஆக பணிபுரிந்து வருகிறார். ஒரு மாத விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ள ரமேஷ், வீட்டிற்கு காலி மனை வாங்குவதற்காக பாரத ஸ்டேட் வங்கி சென்று ரூ.1.50 லட்சம் எடுத்துள்ளார். உடன் சென்ற தந்தை ஜெயராஜை, வங்கியில் நகைக் கடன் பெறுவதற்காக அமர வைத்துவிட்டு ரமேஷ், தனது இரு சக்கர வாகனத்தில் நகராட்சி அலுவலகம் சென்றுள்ளார்.

வங்கிலிருந்து எடுத்த பணத்தை இரு சக்கர வாகனத்தின் பக்கவாட்டில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டி இருந்துள்ளார். வண்டியை நகராட்சி அலுவலக வளாகத்தில் நிறுத்திவிட்டு, அலுவலகத்தினுள் சென்று வாக்காளர் அடையாள அட்டை தொடர்பாக விசாரித்துவிட்டு சுமார் 30 நிமிடங்கள் கழித்து திரும்ப வந்துள்ளார். வந்து பார்த்தபோது, வண்டியின் பெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடு போயிருந்தது தெரிய வந்ததது.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் ரமேஷ் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.