பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

விருதுநகரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பொருள்கள் திருட்டு

விருதுநகரில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளேயிருந்த 4 சவரன் நகை உள்ளிட்ட ரூ.1.30 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On :17 அக்டோபர் 2014, 11:02 am

விருதுநகரில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளேயிருந்த 4 சவரன் நகை உள்ளிட்ட ரூ.1.30 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். 

விருதுநகர் படேல் நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (55). இவர் தனது மனைவியுடன், பெங்களூருவில் வசித்து வரும் மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு கடந்த 4 நாள்களுக்கு முன்பு சென்றுள்ளார். அவரது மகனும் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

இந்நிலையில், பெங்களூருவிலிருந்து வியாழக்கிழமை இரவு இருவரும் வீடு திரும்பியுள்ளனர். அப்போது, வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் உள்ளே சென்று பார்க்கையில் பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்து 4 சவரன் நகை, வெள்ளிப் பொருள்கள் மற்றும் வீட்டில் இருந்த எல்.சி.டி டிவி ஆகியவைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் சந்தோஷ்குமார் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகை உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.