விருதுநகரில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளேயிருந்த 4 சவரன் நகை உள்ளிட்ட ரூ.1.30 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
விருதுநகர் படேல் நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (55). இவர் தனது மனைவியுடன், பெங்களூருவில் வசித்து வரும் மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு கடந்த 4 நாள்களுக்கு முன்பு சென்றுள்ளார். அவரது மகனும் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
இந்நிலையில், பெங்களூருவிலிருந்து வியாழக்கிழமை இரவு இருவரும் வீடு திரும்பியுள்ளனர். அப்போது, வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் உள்ளே சென்று பார்க்கையில் பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்து 4 சவரன் நகை, வெள்ளிப் பொருள்கள் மற்றும் வீட்டில் இருந்த எல்.சி.டி டிவி ஆகியவைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் சந்தோஷ்குமார் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகை உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒடிசாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் மீது தாக்குதல்!
எதிர்காலம் எழுகிறது! வைரலாகும் விஜய் பாதுகாவலர் பதிவு!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா பொத்தான் எங்கு உள்ளது? வாக்களிப்பது எப்படி?

தமிழ்நாட்டில் ரூ.1262 கோடி பறிமுதல்! - அர்ச்சனா பட்நாயக்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

