திருநெல்வேலி மாவட்டத்தில் மழை தீவிரமடைந்துள்ளதால் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. திங்கள்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அணைகள், இம்மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை 95, பாபநாசம் கீழ் அணை 98, சேர்வலாறு அணை 60, மணிமுத்தாறு அணை 55.2, கடனாநதி அணை 18, ராமநதி அணை 51, கருப்பாநதி அணை 6, குண்டாறு அணை 13, அடவிநயினார் அணை 7, அம்பாசமுத்திரம் 42, சேரன்மகாதேவி 43, கன்னடியன் அணைக்கட்டு 47, களக்காடு 23.2, ஸ்ரீவைகுண்டம் 1, தென்காசி 17.4, செங்கோட்டை 11.4, ஆய்க்குடி 25.2, ஆலங்குளம் 56.5. நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.