நெல்லை மாவட்டத்தில் மழைக்கு 15,000 ஏக்கரில் நெற்பயிர்கள் சேதம்: அதிகாரிகள் ஆய்வு
திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் அறுவடை செய்யும் பருவத்தில் உள்ள 15,000 ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. மழை நீடித்தால் நீரில் மூழ்கிய நெற்பயிர்களை கரை சேர்க்க முடியாத நிலை உருவாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை நீரில் மூழ்கிய நெற்பயிர்களை வருவாய்த்துறை, வேளாண்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.









