கன்னியாகுமரி அரசுப் பழத்தோட்டம் பகுதியில் கார் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற மனநோயாளி இறந்தார்.
கன்னியாகுமரி அரசுப் பழத்தோட்டம் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் விபத்தில் சிக்கி இறந்து கிடந்ததை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அப்பகுதி மக்கள் பார்த்து காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் விபத்தில் இறந்தவர் மனநோயாளி என்பது தெரியவந்தது. மேலும் விபத்து நடந்தப் பகுதியில் கேரள வாகனத்தின் பதிவெண் கொண்ட நம்பர் பிளேட் கிடந்ததைக் கைப்பற்றிய போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.