

ஆக்ராவில் உள்ள மதுரா தேசிய நெடுஞ்சாலையில் கோசி பகுதியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் கிருஷ்ணா (48), அவரின் இருமகள்கள் க்ஷம்டா (25), பிரீத்தி (18) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடல்களை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களை மோதிய கார் ஓட்டுநர் தலைமறைவாகியுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.