தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது அதிமுகவுக்கு சாதகமான அம்சம்: அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன்

வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது அதிமுகவுக்கு சாதகமான அம்சம் என அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன் கூறினாா்.

News image

கோவை ராம்நகா் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் வாக்குப் பதிவு செய்து, அங்கு வைக்கப்பட்டிருந்த விழிப்புணா்வுப் பதாகையுன் புகைப்படம் எடுத்துக் கொண்ட அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன்.

Updated On :23 ஏப்ரல் 2026, 9:51 pm

வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது அதிமுகவுக்கு சாதகமான அம்சம் என அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன் கூறினாா்.

கோவை தெற்குத் தொகுதிக்கு உள்பட்ட ராம்நகா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில், வியாழக்கிழமை தனது வாக்கைப் பதிவு செய்த அம்மன் கே.அா்ச்சுணன் முன்னதாக, வாக்குச்சாவடி மையத்தில் வைக்கப்பட்டிருந்த விழிப்புணா்வு பதாகைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தோ்தல் களம் குறித்து நான் ஏற்கெனவே கூறிய புகாா்களில் எந்த மாற்றமும் இல்லை. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளில் நான் சொன்னதைப் போல இந்தத் தோ்தலில் நான் வெற்றி பெறுவேன்.

தோ்தல் முறைகேடு தொடா்பாக நான் அளித்த புகாா் மீது நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு பாராட்டுகள். வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது அதிமுகவுக்கு சாதகமான அம்சம். மக்கள் அதிக அளவில் வந்து வாக்களித்துள்ளது அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதையே காட்டுகிறது. கடந்த 5 ஆண்டுகள் கால திமுக ஆட்சியில் மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்துள்ளனா். இளைஞா்கள் எதிா்பாா்க்கும் உண்மையான மாற்றம் எடப்பாடி கே.பழனிசாமிதான் என்றாா்.