பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உலக அளவில் ஆன்மீக தலமாக விளங்கும் இடமாகும். பழனி கோயிலுக்கு நாளுக்கு நாள் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வந்து செல்கின்றனர். பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலில் இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா 28.01.2015 கொடியேற்றத்துடன் தொடங்கி திருக்கல்யாணம், வௌ்ளிரதம், தைப்பூசம் திருத்தேர்களுடன் தைப்பூசத் திருவிழா 06.02.2015 அன்றுடன் முடிவடைகிறது. தைப்பூச திருவிழாவை சிறப்பான முறையில் நடத்தி முடித்திட இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, போக்குவரத்துத்துறை, மருத்துவத்துறை, தீயணைப்புத்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவர்களுடனான விழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் பழனியாண்டவர் கல்லூரி வழிபாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.