மக்கள் நெருக்கம் மிகுந்த நகரப்பகுதிக்கு வனவிலங்கு வந்திருப்பது மிகவும் ஆபத்தானதுதான். ஆகவே, சிறுத்தை வந்த வழித்தடத்தை கண்டுபிடிக்க திருநெல்வேலி வனச்சரகர் தார்ஷியூஸ் தலைமையில் 12 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறுத்தையின் கால்த்தடம், சிறுத்தையால் கொலை செய்யப்பட்ட சிறு மிருகங்கள் ஏதேனும் தெரியவந்தால் பொதுமக்கள் வனத்துறையிடம் தெரிவித்து ஒத்துழைப்பு அளிக்கலாம்.களக்காடு, திருக்குறுங்குடி, கடையம், அம்பாசமுத்திரம், புலவன்குடியிருப்பு உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்துவிடாமல் கண்காணிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.