பழனியில் காவல் நிலையங்களில் போலி வழக்கறிஞர்களை வைத்து கட்டப்பஞ்சாயத்து - வழக்கறிஞர்கள் சங்கம் புகார்
பழனியில் காவல் நிலையங்களில் போலி வழக்கறிஞர்களை வைத்து நடைபெறும் கட்டப்பஞ்சாயத்து குறித்து காவல்துறை நடவடிக்கை இல்லாத நிலையில் முற்றுகை போராட்டம், நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என பழனி வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.









