கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திருச்சுழி அருகே மது வாங்கி வரச் சொன்னவருக்கு அரிவாள் வெட்டு: ஒருவர் கைது

திருச்சுழி அருகே மது வாங்கி வர சொன்னவரை அரிவாளால் வெட்டியவரை எம்.ரெட்டியபட்டி போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

Updated On :8 ஜூலை 2015, 2:10 pm

திருச்சுழி அருகே மது வாங்கி வர சொன்னவரை அரிவாளால் வெட்டியவரை எம்.ரெட்டியபட்டி போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

திருச்சுழி அருகே ஏரசின்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராசையா(40).  சிலுக்கப்பட்டியைச் சேர்ந்தவர் துப்புரவு பணியாளராக இருக்கும் ராமர்(40) ஆகிய இருவரும் நண்பர்கள் ஆவார்கள். இந்நிலையில், புதன்கிழமை காலையில் மது குடிப்பதற்கு ராமர் பணம் கேட்டாராம். அதற்கு, ராசையா தனக்கும் மது வாங்கி வரும் படி கூறி ரூ.1000 கொடுத்து அனுப்பி வைத்தாராம். நீண்டநேரமாகியும் அவர்  வராத காரணத்தால் மதுக்கடைக்கே நேரடியாக சென்றாராம. அப்போது, ராமர் அதிகமாக மது குடித்த நிலையில் நின்றிருந்தவரிடம், எனக்கு ஏன் மது வாங்கி வரவில்லையென கேட்டும், மீதம் பணமும் கேட்டாராம. அதற்கு பணம் எதுவும் வாங்கவில்லையென மறுத்ததோடு அவர் வைத்திருந்த அரிவாளால் ராசையாவை வெட்டியதில் காயம் அடைந்தாராம்.

இது தொடர்பாக அவர் எம்.ரெட்டியாபட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் துப்புரவு பணியாளர் ராமரை போலீஸார் கைது செய்து அரிவாள் வெட்டு சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.